
விரிசல்
வேகமான கணவன், நிதானமான மனைவி. அன்பினால், அவளுக்கே தெரியாமல், அவள் தன் சொந்தக் குரலை இழக்கத் தொடங்குகிறாள். சியோலின் ஒரு பழைய வீட்டில், ஒரு உடைந்த கிண்ணத்தின் கதை.
தமிழ் புனைகதை, இலக்கிய பகுப்பாய்வு, படைப்பாற்றல் எழுத்து

வேகமான கணவன், நிதானமான மனைவி. அன்பினால், அவளுக்கே தெரியாமல், அவள் தன் சொந்தக் குரலை இழக்கத் தொடங்குகிறாள். சியோலின் ஒரு பழைய வீட்டில், ஒரு உடைந்த கிண்ணத்தின் கதை.

2050. பூமி, நிலா, செவ்வாய் — மூன்று உலகங்களில் பரவிய ஒரு குடும்பம். வெகுதொலைவிலிருந்து யாரோ ஒரு பழமையான கேள்வியைக் கேட்கிறார்கள். செவ்வாய் மண்ணில் மறையும் ஒரு தந்தையின் உயிர், ஒரு மகனின் சாத்தியமற்ற ஆராய்ச்சி, நட்சத்திரங்களுக்கு அப்பால் காத்திருந்த ஒரு ரகசியம் — எல்லாம் ஒரே ஒரு பிடி மண்ணில் சந்திக்கின்றன.

ஒரு மழைக் காலை, ஒரே ஒரு coffee கார்த்திக்கை உயிரோடு வைத்தது; அதே காலை, அதே நிமிடம், அவனுடைய நான்கு நண்பர்களைப் பறித்தது. யார் வாழ்வது யார் சாவது என்பதை நம் தகுதி தீர்மானிக்கிறதா, அல்லது வெறும் தற்செயலா? அந்தக் கேள்விக்கான பதிலை, சமையலறைத் தரையில் ஊரும் ஒரு எறும்புக் கூட்டத்திடம் கார்த்திக் தேடத் தொடங்குகிறான்.

இருபது வருடங்களுக்கு முன், ஒரு நள்ளிரவில், இளையராஜாவின் ஒரு பாடல் — அவரது குரலும் ஒரு பெண் குரலும் — இரண்டே வரிகளில் அரவிந்தின் உயிரைக் காப்பாற்றியது. வெறும் அதிர்வுகள் ஒரு மனிதனை ஒரே நொடியில் எப்படி மாற்றுகின்றன? அந்தக் கேள்வியை அளக்க அவன் ஒரு கருவியைக் கட்டுகிறான் — உடம்பின் ஆற்றலைப் படமாகக் காட்டும் ‘பிராணா’. அது எல்லோருடைய ஒளியையும் காட்டியது; அவன் மட்டும் ஒரு ஒளியைப் பார்க்கத் தவறினான்.

நாகப்பட்டினக் கடற்கரையில் தனிமையில் வாழும் ஆறுமுகனின் கடைசி மண்பானையில் — தன் முட்டைகளை உயிரினும் மேலாகக் காக்கும் ஒரு தாய். அவள் ஏன் ஒரு வாய் கூடச் சாப்பிட மறுக்கிறாள்? கடலின் ஒரு உயிர், ஐம்பது வருடம் முந்திய ஒரு விசிறியை அவனுக்கு நினைவூட்டுகிறது.

1991-ல் சிங்கப்பூர் போனவனிடமிருந்து முகவரி வரவே இல்லை. அனுப்ப முடியாத கடிதங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எழுதி, தகரப் பெட்டிகளில் சேர்த்து வைத்தாள் லலிதா. பன்னிரண்டு வருடங்கள் கழித்து அவன் திரும்பி வந்தபோது — அவள் கேட்டது ஒரே ஒரு கேள்வி.

ரெட்மண்ட் நகரத்தின் ஒரு சாம்பல் குளிர்காலம். வீட்டுக்குள் ஒரு சின்ன காடு வளர்த்த மகேஷ், தன் செடிகளோடு பேசுவான். ஒரு நாள் வேலை நீக்கத்தின் பயத்தில் அவன் தன்னையே மறந்தபோது — அவனுக்கு ஆறுதல் தந்த அதே செடிகள், அவனுக்குக் கேட்காத ஒரு அலைவரிசையில், தண்ணீரின்றித் தவித்துக் கத்திக்கொண்டிருந்தன.

2026 சென்னை. ஒரு வாட்ஸ்அப் டிப் குரூப். ஒரு ஸ்கிரீன்ஷாட். வினோத் என்ற ஐ.டி. ஊழியனை அது ஒவ்வொரு இரவும் நீலத் திரை முன்னால் அமர வைக்கிறது. அதே அலுவலகத்தில், டீ போடும் ஐயப்பன் — பதினைந்து வருடமாக ஒரு பங்கை வாங்கி வைத்து, ஒரு முறை கூடத் திரையைப் பார்க்கவில்லை. வெற்றியாளனும் தோல்வியாளனும் யார்?

தாமரைக்குளம் — ஒரே தியேட்டர், ஒரே டீக்கடை, மணிக்கு ஒரு பஸ் கொண்ட ஊர். எட்டு வயதுப் பையனுக்குத் தாத்தாவின் சுருட்டுப் புகை மேல் ஒரு கேள்வி வந்தது. அந்தக் கேள்வி அவனை மூன்று ரகசியத் திட்டங்கள், ஒரு பெரிய தப்பித்தல், கடைசியில் ஒரு தோசைக் கரண்டி வரை கொண்டுபோய் விட்டது.

ஒரு செவ்வாய்க்கிழமை மதியம், சக ஊழியர் கொண்டு வந்து வைத்த ஒரு மல்லிகைச் செடி. ஒரே ஒரு மணம் — இருபத்தாறு வருடம் முன்னே ஒரு பதினாறு வயதுப் பையனை அவனிடம் திரும்ப அழைத்துச் செல்கிறது.

ஒரு மூடுபனி ரயில் நிலையத்தில், ஈரமான ஜன்னல் கண்ணாடி வழியே ஒரு ஜோடி கண்கள் அவனைப் பார்க்கின்றன. ‘அறியேன்… ஆனால் உணர்கிறேன்.’ காலத்தையும் மரணத்தையும் மீறி, ஒரு பொன் நட்சத்திரத்தால் இணைக்கப்பட்ட இரண்டு ஆத்மாக்கள் மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஒரு மறுபிறவிக் காதல்.

ஒரு கதை எப்படி பிறக்கிறது? எழுத்தாளனின் மனதில் நடக்கும் படைப்புச் செயல்முறை பற்றிய என் அனுபவங்கள்.